Thursday, October 26, 2006

விடுதலை

விடுதலை
பெற்றோம்
உரிமைக்கு

அடிமையாகவே
இருக்கிறோம்
உணர்வுகளுக்கு

புலியும் கயலும்
வில்லுமாய்
பிரிந்திருந்தோம்

தெள்ளமுதாம் தமிழ்
இணைக்க
மெய்யமுதாம் தண்ணீருக்காய்
கன்னடிகர்
எனப் பிரிகிறோம்

மண் தாய்தான்
எதிர்பார்ப்பின்றி கொடுத்தலிலும்
எந்தப் பிழையும் பொறுத்தலிலும்
இந்தியர் என்றிணைந்தால்
கற்பனைக் கோடுகளால்
நாலாப்புறமும் பிரிகிறோம்

எல்லாமே இறை
இணைகிறோம்
என்னிறை உன்னிறை
எனப் பிரிகிறோம்

பிரிவினைகளால்
மட்டுமே
இணைந்திருக்கிறோம்

உரிமைகளுக்கு கிடைத்த
விடுதலை கிடைக்குமா
பிரிவினை உணர்வுகளுக்கு?

No comments: