Wednesday, September 06, 2006

அறிமுகம்

நான் வலைப் பதிவுகளில் சில காலங்களாக உலவி வரும் ஒரு பதிவாளன். காந்தி போன்றவர்களால் நம் தேசம் நமக்கு 1947ம் ஆண்டு மீண்டும் கிடைத்தது. அன்னியர்களிடம் இருந்து தேசம் நமக்கு கிடைத்து விட்டது ஆனால் நாம்தான் இன்று தேசத்திற்கு அன்னியர்களாகி விட்டோம்.

அன்பு, அறன் என்ற இந்திய நாட்டின் இறையான்மை இன்று நமக்கு அன்னியமாகி விட்டது. அஹிம்சையில் உள்ள நம்பிக்கைகள் இன்று சுத்தமாக குறைந்து கொண்டே வருகிறது. அனைவருமே ஹிம்சை தான் அனைத்திற்கும் தீர்வு என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த என் முயற்சி அஹிம்சை ஹிம்சையை விட பல மடங்கு உறுதியானது என்ற என் நம்பிக்கைக்கு எனக்கு நானே வைத்துக் கொள்ளும் சத்திய சோதனை.

No comments: