Friday, September 15, 2006

அஹிம்சை

அஹிம்சை என்பது பிற உயிர்களைக் கொல்லாமை மட்டும் அல்ல. அது அற வழிப் போராட்டம்.

நான் மஹாத்மா அல்ல சாதாரண மனிதன் ஆகவே எனக்கு இந்த வழிகள்தான் தெரியும் என்று கூறி தவறுகள் புரிவது சரியல்ல. தெரிந்தே தவறுகள் செய்வது அதற்கு தகுந்த நியாயங்கள் சொல்வது எந்த விதத்திலும் சரி அல்ல.

அஹிம்சை மூலம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் உடனடித் தீர்வு ஏற்படாது. ஒரு பிரச்சனைக்கு அஹிம்சை வழியில் சென்று தீர்வு காண பல காலம் பிடிக்கலாம் ஆனால் அப்படி காணப் படும் தீர்வே சரியானதாக இருக்கும்.

ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் திரும்ப அதனை விட மோசமாக திட்டுவது எப்படி ஒரு பிரச்சனையைத் தீர்க்கும்? பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமெனில் அவர் திட்டுவது தவறு என்று உணரச் செய்ய வேண்டும். இதற்கு காலம் பல பிடிக்கலாம் ஆனால் இதுவே இந்தப் பிரச்சனை தீர வழி வகுக்கும். மாறி மாறி திட்டிக் கொள்வதால் என்ன பயன்?

இது போலவே பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

அவர் ஹிம்சை புரிந்தார் நாமும் ஹிம்சை புரிவோம் என்று எடுத்துக் கொண்டால் அவர் ஹிம்சை புரிந்ததற்கும் அவரால் விளக்கம் கொடுக்க முடியும் என்றால் என்றுதான் ஓயும் ஹிம்சைகள்?

இதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது வலையில் கண்ணில் அகப்பட்டது நன்றி மரத்தடி

சொல்லாலும் செயலாலும் மற்றவர்களைத் துன்புறுத்தாமல் இருப்பது. மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்துவது, மற்ற உயிர்களை மதித்தல், செடி கொடியாகட்டும், சக உயிர்களாகட்டும் எதற்கும் மதிப்பளிக்கவேண்டும்.

தன்னுயிர் போல பிற உயிர்களையும் கருதும் நோக்கு அது தான் அஹிம்சை.
உடலாலும் மனதாலும் பிறருக்கு தீங்கு வராமல் காப்பதும் அஹிம்சை தான். ஒருவன் நான் யாரையும் அடித்ததில்லை துன்புறுத்தியதில்லை எனலாம். ஆனால் அவன் பேச்சைக் கேட்டு சிலர் மனம் துன்புறுவார்களேயானால் அவன் அஹிம்சையில் இருந்து தவறியவன் ஆகிறான்.

இதற்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது வலையில் கண்ணில் அகப்பட்டது நன்றி பானுக்குமார்

அஹிம்சை என்னும் சொல் , பல கருத்துக்களை உள்ளடக்கியுள்ள வார்த்தை. அதற்கு ஒரே வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியாது. அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை முதலிய கருத்துக்களைக் கொண்டது அஹிம்சை என்னும் சொல். இந்தக் கருத்துக்களைத் திருக்குறள் சில அதிகாரங்களினால் விளக்குகிறது.

இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலிய அதிகாரங்களின் கருத்துக்கள் சேர்ந்ததுதான் அஹிம்சை என்பதன் உண்மைப் பொருள்.

No comments: