Friday, September 15, 2006

அன்பு

அன்பு இந்த வார்த்தையில் தான் எத்தனை மகத்துவமானது. அன்பில்லாமல் சமூகம் என்ற இந்தக் கட்டமைப்பு எப்படி உருவாகி இருக்கும்? தாயின் அன்பு முதல் முகம் தெரியாத பலரின் அன்பு வரை இந்த உலகில் அன்பை விட அருமையான ஒரு விஷயம் இருக்கிறதா?

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

வாடிய பயிறைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற மனநிலை கொள்ள இயலாவிட்டாலும் அது போன்ற மனநிலை கொள்வதே சரி என்றாவது எல்லோரும் உணர வேண்டும்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

நமக்கு தீங்கு செய்பவரிடத்திலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறு இயலாவிட்டாலும் நமக்கு தீங்கு செய்யாத எல்லோரிடத்திலுமாவது அன்பு செய்ய வேண்டும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

அன்பையே மதம் என்று கொண்ட மனிதன் எல்லா மதங்களையும் சார்ந்தவனாகி விடுவான். எல்லா மதங்களும் அன்பையே போதிப்பதால் அன்பை மதம் என்று கொள்வது நீங்கள் எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த மதத்தை சார்ந்தவராகி விடுவீர்கள்.

1 comment:

Anonymous said...

நல்ல சிந்தனைகள் ...