Monday, September 18, 2006

விலங்குகளின் பாடம் மனிதனுக்கு

Image Hosted by ImageShack.us

ஆறாம் அறிவு இல்லாதது நாய். நாய் அறிந்தது எல்லாம் survival instinct மட்டுமே. ஆனால் இங்கு அதனுடைய survivalக்கு ஆபத்து விளைவிக்க கூடிய விலங்கிடம் கூட அன்பு செலுத்துகிறது.

மாற்று இனத்திடம் கூட அன்பு செலுத்தும் இந்த நாயிடம் இருந்து ஆறாம் அறிவு கொண்ட மனிதன் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. மாற்று மனிதனிடம் இருந்து உன்னை மதத்தால், ஜாதியால், நிறத்தால், இனத்தால், மொழியால் என்று எந்த வகையிலும் வேற்றுமை படுத்திக் கொள்ளாதே என்பது தான் அப்பாடம்.

Image Hosted by ImageShack.us

சுனாமியால் இலங்கையில் பாதிக்கப் பட்ட ஆமையும் நீர் யானையும் நண்பர்களாகி விட்டதாம். இரண்டும் ஒன்றை ஒன்று பிரிவதில்லையாம். அன்பு என்பது எல்லை இல்லாதது என்பதற்கு இதனை விட ஒரு சாட்சியுண்டா?

மனிதர்களில் பலர் சில சமயம் மிருகமாகி விடுகிறார்கள். மிருகங்களில் சில மனிதத் தன்மை பெற்று விடுகின்றன.

அன்பு செய்யுங்கள் உங்கள் மனதின் பிரிவினைகளை நீக்கி.

2 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக சொன்னீர்கள்

காந்தித் தொண்டன் said...

நன்றி வடுவூர் குமார்.